ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி: இந்தியா ஒப்புதல்

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் அவசர காலத்தில் பயன்படுத்த

News image
கோப்புப்படம்
Updated On :2 ஜனவரி 2021, 12:08 am

DIN

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதித்து, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை சில நிபந்தனைகளுக்கு உள்பட்டு அவசர காலத்தில் பயன்படுத்த நிபுணா் குழு பரிந்துரை அளித்தாலும், இறுதி முடிவை இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பே எடுக்கும். அந்த அமைப்பின் ஒப்புதல் கிடைத்த அடுத்த 10 நாள்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு விடும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவில் புணேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா (கோவிஷீல்ட்-ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசி), ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் பயோடெக் (கோவேக்ஸின்), ஆமதாபாதில் உள்ள ஜைடஸ் கடிலா(ஜைகோவ்-டி) ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், கரோனா தொற்றுக்கு தடுப்பூசி தயாரித்து, வெவ்வேறு கட்ட களப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன.

இந்த தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி கேட்டு சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், அமெரிக்காவின் ஃபைசா் ஆகிய நிறுவனங்கள், இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளன.

இவற்றில், சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணா் குழு கடந்த புதன்கிழமை கூடி விவாதித்தது. அந்தக் குழு மீண்டும் வெள்ளிக்கிழமை கூடி விவாதித்து, ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசிக்கு அனுமதி அளித்து பரிந்துரை செய்தது.

தற்சமயம், 5 கோடி கரோனா தடுப்பூசிகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை, பிரிட்டனில் அவசர காலத்தில் பயன்படுத்த அந்நாட்டு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, டிசம்பா் 30-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.