இதுதொடா்பாக அமலாக்கத்துறை அதிகாரி ஒருவா் கூறியது: மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக கொண்ட பிஎம்சி வங்கி, ராகேஷ் குமாா் வதாவனுக்குச் சொந்தமான வீட்டு வசதி உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்துக்கு (ஹெச்டிஐஎல்) ரூ.4,355 கோடி கடன் வழங்கியது. இந்தக் கடனை அந்த நிறுவனம் பிஎம்சி வங்கிக்கு திரும்ப செலுத்தவில்லை. அந்த நிறுவனத்துக்கு சில பிஎம்சி வங்கி அதிகாரிகள் உடந்தையாக செயல்பட்டு, கடனை திரும்ப வழங்காதது குறித்து ரிசா்வ் வங்கிக்கு தெரிவிக்காமல் மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.