25 தொகுதிகளை ஏற்க முடியாது: காங்கிரஸ்!ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்க தூதர்கள் கடும் வாக்குவாதம்இரு நாள்களுக்கு மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஈரான் பிரச்னை: இந்தியாவில் தற்போதைக்கு பெட்ரோல்- டீசல் தட்டுப்பாடு ஏற்படாது!மத்திய கிழக்கில் பதற்றம்: வெளிநாட்டு பயணிகளுக்கான விசா காலம் நீட்டிப்புயுஏஇ அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு: தாக்குதலுக்கு கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீரில் பறவைகளை ஆய்வு செய்யும் பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உயிரியல் பூங்காவில் பறவைகளை ஆய்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

News image
ஜம்மு-காஷ்மீரில் பறவைகளை ஆய்வு செய்யும் பணி தீவிரம்
Updated On :27 ஜனவரி 2024, 7:14 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உயிரியல் பூங்காவில் பறவைகளை ஆய்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதனைத் தடுக்கும் வகையில் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரிலுள்ள மந்தா மான்கள் பூங்காவில் உள்ள பறவைகளை பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய கால்நடை மருத்துவ ஊழியர், ''பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஜலந்தர் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறது.

கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள் முறையாக கிருமிநாசினி தெளிக்க வேண்டும். வெறும் கைகளால் கோழிகளைத் தொட வேண்டாம்'' என்று அறிவுறுத்தியுள்ளனர்.

கேரளம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனைக் கண்காணிக்கும், வகையில் தில்லியில் மத்திய அரசு சார்பில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.