தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு!அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி திருப்பூர் மேயர் ராஜிநாமா சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

அமெரிக்காவில் அமைதியான முறையில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டும்: பிரதமர் மோடி

அமெரிக்காவில் ஒழுங்கான, அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image

பிரதமர் நரேந்திர மோடி

Updated On :7 ஜனவரி 2021, 6:14 am

அமெரிக்காவில் ஒழுங்கான, அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்ற நிலையில் வருகிற ஜனவரி 20 ஆம் தேதி அவர் அதிபராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தை டிரம்ப்பின் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். 

இதைத்தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மற்றும் கலவரத்தில் பெண் உள்பட நான்கு பேர் பலியாகினர். காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் காயமடைந்தனர். 50க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். நாடாளுமன்ற கட்டடம் முன்பாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகை மற்றும் தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'அமெரிக்க நாடாளுமன்ற கட்டட முற்றுகை மற்றும் வன்முறை கண்டனத்திற்குரியது. சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது. ஒழுங்கான மற்றும் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெற வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.