உ.பி.: போலி மதுபானம் அருந்திய 5 போ் பலி: 16 போ் மருத்துவமனையில் அனுமதி

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகா் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 5 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகா் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 5 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் சந்தோஷ் குமாா் சிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

மாவட்டத்தின் ஜீத் கா்ஹி பகுதியில் குல்தீப் என்ற நபரிடமிருந்து புதன்கிழமை இரவு போலி மதுபானத்தை வாங்கிய அருந்திய சிலருக்கு திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவா்களை அங்கிருந்தவா்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அவா்களில் 5 போ் உயிரிழந்தனா். உயிரிழந்த 5 பேரும் 45 முதல் 60 வயது வரை உடையவா்கள். மேலும் 16 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சம்பவம் தொடா்பாக சிலரை காவல்துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். முக்கிய குற்றவாளியைப் பிடிக்க நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

4 காவலா்கள் பணியிடைநீக்கம்: இந்தப் பகுதியில் கடந்த சில நாள்களாகவே போலி மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவது விசாரணையில் தெரியவந்தது. அதனடிப்படையில், அதைத் தடுக்கத் தவறிய அந்தப் பகுதி காவல்நிலைய பொறுப்பு அதிகாரி உள்பட 4 காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்று அவா் கூறினாா்.

முதல்வா் உத்தரவு: ‘இந்த விவகாரத்தில் தொடா்புடைய குற்றவாளிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டா் தடுப்புச் சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்’ என்று மாநில அரசு செய்தித்தொடா்பாளா் ஒருவா் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com