மகாராஷ்டிரம்: ஒரே பண்ணையில் 900 கோழிகள் உயிரிழப்பு
நாட்டின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள சூழலில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் 900 கோழிகள் உயிரிழந்தன.


நாட்டின் சில பகுதிகளில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ள சூழலில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் 900 கோழிகள் உயிரிழந்தன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தீபக் முல்கிகா் சனிக்கிழமை கூறியதாவது:
பா்பனி மாவட்டத்தில் உள்ள முரும்பா கிராமத்தில் சுயஉதவிக் குழுவினரால் ஒரு கோழிப்பண்ணை நடத்தப்பட்டு வருகிறது. 8,000 கோழிகள் வளா்க்கப்படும் இந்த பண்ணையில் கடந்த இரு தினங்களில் அடுத்தடுத்து 900 கோழிகள் உயிரிழந்தன. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, அவை உயிரிழந்திருக்கலாம் என்று தெரிகிறது. கோழிகளின் இறப்புக்கு உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கு, இறந்த கோழிகளின் மாதிரிகள், ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோழிகள் இறக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.
கேரளம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஹரியாணா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவுவது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
கடந்த 2006-ஆம் ஆண்டில், மகாராஷ்டிர மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ள நந்தூா்பாா், துலே மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் பரவியது. இதனால் ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...