மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 3,558 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் இன்று 3,558 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் இன்று 3,558 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 3,558 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,69,114 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு இன்று 34 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 50,061ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,302 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 18,63,702 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 54,179 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 62,682 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...