கேரளத்தின் பாலக்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலை மீது பாஜக கொடியை போர்த்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலத்தின் பாலக்காடு நகராட்சி அலுவலக வளாகத்தில் காந்தி சிலை உள்ளது. இந்த சிலை மீது கடந்த திங்கள்கிழமை மர்ம நபர் ஒருவர் பாஜக கொடியைப் போர்த்தினார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இந்த செயலில் ஈடுபட்டவரைக் கைது செய்யக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு பாலக்காடு நகராட்சி செயலர் புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் 29 வயதான பிஜேஷ் என்பவரை அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐ.பி.சி) பிரிவு 153 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் பிஜேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என தெரிய வந்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாலக்காடு நகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் ஜெய் ஸ்ரீராம் பதாகைகளை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடக்கம்!
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் சமுதாயத்தைக் கட்டமைப்போம்: குடியரசுத் தலைவர் மகளிர் நாள் வாழ்த்து!
ஈரான் பள்ளி மீது தாக்குதலில் 165 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் அமெரிக்காவுக்கும் தொடர்பில்லை: டிரம்ப்

பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!
வீடியோக்கள்

#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

