வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

முதல் நாளில் 2,934 இடங்களில் 3 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி

நாடு முழுவதும் தடுப்பூசி செயல்திட்டம் நடைமுறைக்கு வரும் முதல் நாளில் மொத்தம் 2,934 இடங்களில் 3 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது

News image
Updated On :13 ஜனவரி 2021, 11:20 pm

DIN

புது தில்லி: நாடு முழுவதும் தடுப்பூசி செயல்திட்டம் நடைமுறைக்கு வரும் முதல் நாளில் மொத்தம் 2,934 இடங்களில் 3 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 
இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளதாவது: 
நாடு முழுவதும் வரும் ஜனவரி 16-ஆம் தேதி கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. முதல் நாளில் நாடு முழுவதும் மொத்தம் 2,934 இடங்களில் சுமார் 3 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 
தடுப்பூசி செலுத்தும் ஒவ்வொரு அமர்விலும் அதிகபட்சமாக 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 
தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ளும் ஒவ்வொரு இடத்திலும் ஒருநாளைக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தடுப்பூசிகளை செலுத்தவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.