இந்தியா
போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன்: மோடி
போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரை பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.
புதிதில்லி: போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரை பக்க பதிவில் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் புறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவரது சுட்டுரை பக்க பதிவில், போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன்அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.