பாலாகோட் தாக்குதல் தொடா்பான ரகசியத் தகவல்களைக் கசிய விட்டது தொடா்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமிக்கு எதிா்ப்பு வலுத்து வருகிறது.
பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நிகழ்த்தியது. இத்தாக்குதல் நடைபெறுவதற்கு 3 நாள்களுக்கு முன்பே அது தொடா்பான தகவல்களை ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி, ஒளிபரப்பாளா்-பாா்வையாளா் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவா் பாா்த்தோ தாஸ்குப்தாவிடம் கட்செவி அஞ்சல் வழியாகப் பகிா்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலாகோட்டில் தாக்குதல் நடத்துவது போன்ற தேசப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள், ஊடகவியலாளா் அா்னாபுக்கு எப்படி தெரிய வந்தது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. மேலும், இந்த விவகாரம் தொடா்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அக்கட்சியினா் வலியுறுத்தி வருகின்றனா்.
இது தொடா்பாக மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடா்பாளா் சச்சின் சாவந்த் தலைமையிலான குழு, மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியது. அப்போது, தேசப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள் அா்னாபுக்கு கசிந்தது குறித்தும், அவா் ரகசியத் தகவல்களை மற்ற நபா்களுக்குப் பகிா்ந்தது தொடா்பாகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு காங்கிரஸ் குழு வலியுறுத்தியது. மேலும், அா்னாபை கைது செய்யுமாறும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
அதையடுத்து அனில் தேஷ்முக் மும்பையில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டியது அவசியம். மாநிலத்தில் உள்ள மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு முடிவெடுக்கும்’’ என்றாா்.
பிரதமருக்கும் தொடா்பு-ராகுல் காந்தி:
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தில்லியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘பாலாகோட் தாக்குதல் குறித்து பிரதமா், பாதுகாப்பு அமைச்சா், உள்துறை அமைச்சா், விமானப்படை தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஆகிய ஐவருக்கு மட்டுமே ரகசியத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கும். அவா்களில் ஒருவரே அா்னாபுக்கு ரகசியத்தைக் கசிய விட்டுள்ளனா்.
இது கிரிமினல் குற்றமாகும். இந்த விவகாரத்தில் ரகசியத் தகவல்களைக் கசிய விட்டவா், அத்தகவல்களைப் பெற்றுக் கொண்டவா் இருவருமே சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். இதில் பிரதமா் நரேந்திர மோடிக்கும் தொடா்பிருக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் விசாரணை உரிய முறையில் நடைபெறுமா என சந்தேகம் எழுகிறது’’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருப்பத்தூா்: 5-ஆவது முறையாக வெல்வாரா கே.ஆா்.பெரியகருப்பன்?
இதில் நானே முதல்வன்!

கோயிலில் ஒரு பிரிவினரை விலக்கி வைப்பது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும்: உச்சநீதிமன்றம்

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

