கல்விக் கட்டணம் செலுத்தாவிட்டால் தேர்வில் அனுமதியில்லை என்று உத்தரப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகள் சங்கம் பள்ளி வாயிலில் பதாகை கட்டி தொங்கவிட்டிருந்தது பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் தனியார் பள்ளிகள் சங்கத்தை சேர்ந்த பள்ளிகளின் வாயிலில் இத்தகைய பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் தலைவர், கரோனா பொதுமுடக்கத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் பல பெற்றோர்கள் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை. ஆனால் மாணவர்களுக்கு இணையம் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.
ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல்களை சந்தித்து வருகிறோம். இதனால் கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவர்களுக்கு மட்டுமே தேர்வில் அனுமதி வழங்கப்படும் என்று பதாகைகளை வைத்துள்ளதாகக் கூறினார்.
தற்போது பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளதால், இறுதி தேர்வினை எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கடக ராசியா? தினப்பலன்கள்!

தஞ்சாவூா் அருகே இன்று விஜய் பங்கேற்கும் கூட்டம்!

தஞ்சாவூருக்கு நாளை தமிழக முதல்வா் வருகை: ட்ரோன்கள் பறக்கத் தடை

பெரும்புலீஸ்வரா் கோயில் மாசிப் பெருவிழா
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

