மதம் சார்ந்த பேச்சுகளால் வன்முறையைத் தூண்டுகிறது பாஜக: திரிணமூல்
மதம் சார்ந்த பேச்சுகளால் மக்களிடையே பாஜக வன்முறையைத் தூண்டுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிர்ஹாத் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


மதம் சார்ந்த பேச்சுகளால் மக்களிடையே பாஜக வன்முறையைத் தூண்டுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிர்ஹாத் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இது தொடர்பாக பேசிய அவர், ''மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்கள் 10 சதவிகிதத்தினர் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
இது தேர்தல் ஆணையத்தின் மீதான பாஜகவின் நேரடி தாக்குதல். மேற்கு வங்க மக்களிடையே பாஜக வெறுப்புணர்வை வளர்க்கிறது.
மதம் சார்ந்த பிரசார பேச்சுகள் மூலம் மக்களிடையே வன்முறையை பாஜக தூண்டுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். வெளிப்படையான மற்றும் அமைதியான தேர்தல் தான் நாங்கள் எதிர்பார்ப்பது. ஆனால் பிளவு உண்டாக்கி வாக்கிற்காக மக்களை அவர்கள் தீவிரவாதிகளாக மாற்றி வருகின்றனர்'' என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...