வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜம்மு-காஷ்மீரில் கடும் உறைபனி: சிரமத்தில் வாகன ஓட்டிகள்

ஜம்மு-காஷ்மீரில் உறைபனிக் காலத்தின் உச்சமாக மிகவும் குளிர்ந்த வெப்பநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக, நீர்நிலைகள், குடிநீர் குழாய்களில் பனிக்கட்டியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

News image
Mercury falls below freezing point across Kashmir Valley
Updated On :21 ஜனவரி 2021, 6:43 am

DIN

ஜம்மு-காஷ்மீரில் உறைபனிக் காலத்தின் உச்சமாக மிகவும் குளிர்ந்த வெப்பநிலை நிலவி வருகின்றது. இதன் காரணமாக, நீர்நிலைகள், குடிநீர் குழாய்களில் பனிக்கட்டியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, 

காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரில் மைனஸ் 7 டிகிரியாக பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய தினம் மைனஸ் 6 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பனிச்சறுக்கு ரிசார்டில் நேற்றிரவு மைனஸ் 7.8 டிகிரி செல்சியஸாக பதிவானது. இதற்கு முந்தைய நாள் இரவு மைனஸ் 6.5 டிகிரி செல்சியஸாக இருந்தது. 

காசிகுண்டில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸாகவும், வடக்கு காஷ்மீரின் குப்வாராவில் மைனஸ் 5.9 டிகிரி செல்சியஸாகவும், கோக்கர்நாக்கில் மைனஸ் 6.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது. 

நடப்பாண்டில் பெரும் பனிப்பொழிவு நிலவி வருவதால் காஷ்மீர் பிரதேசத்தின் பெரும்பகுதி கடும் பனிப்பொழிவில் சிக்கியுள்ளது. பல இடங்களில் உறைநிலைக்குக் கீழ் (மைனஸ் டிகிரி) வெப்பநிலைக்குச் சென்றுவிட்டது. இதன் காரணமாக காஷ்மீரப் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்துவிட்டன. குறிப்பாக இரவுநேர வெப்பநிலை மேலும் கீழே இறங்கியுள்ளது.

குடிநீர் குழாய்களும் உறைந்துள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. உயரமான பகுதிகளில் பனிப்பொழிவு கூடுதலாக உள்ளது. 

அதிகாலை நேரத்தில் கடும் உறைபனி நிலவி வருவதால் வாகன ஓட்டிகளுக்கு வாகனம் ஓட்டுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 31-ம் தேதி வரை இந்த நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.