அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி: அரசுடனான பேச்சுக்கு பிறகு விவசாயிகள் அறிவிப்பு

திட்டமிட்டபடி ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

News image
திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி: அரசுடனான பேச்சுக்கு பிறகு விவசாயிகள் அறிவிப்பு
Updated On :22 ஜனவரி 2021, 12:18 pm

DIN

திட்டமிட்டபடி ஜனவரி 26-ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசுடன் நடைபெற்ற 11-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து விஞ்ஞான் பவனிலிருந்து வெளியே வந்த விவசாயிகள் இதனைத் தெரிவித்தனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஏற்கெனவே 10 முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இன்று 11-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

விஞ்ஞான் பவனில் சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுப்பு தெரிவித்தது.

இதனைத்தொடர்ந்து வெளியே செய்தியாளர்களை சந்தித்த பாரதிய கிஷான் யூனியன் அமைப்பை சேர்ந்த ராகேஷ் திலக், பேச்சுவார்த்தையின்போது வேளாண் சட்டங்களில் திருத்தங்களை செய்துகொள்ளவும், இரண்டு ஆண்டுகள் வரை வேளாண் சட்டங்களை ஒத்திவைப்பதாகவும் கூறியது. ஆனால் அதனை நாங்கள் ஏற்கவில்லை. இந்த சலுகைகளை ஏற்றால் மட்டுமே அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்ததாகவும் கூறினார்.

ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு நாளன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.

அமைச்சர் மூன்றரை மணிநேரம் காத்திருக்க வைத்து எங்கள் அனைவரையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டார் என்று கிஷான் மஸ்தூர் சங்கர்ஸ் கமிட்டியின் பந்தேர் குற்றம் சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.