இந்தியாவில் 8 மாதங்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) குறைவாகப் பதிவாகியுள்ளது.
இதுபற்றி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"8 மாதங்களுக்குப் பிறகு இந்தியாவில் குறைவான கரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,102 பேருக்கு மட்டுமே கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது."
கடந்தாண்டு ஜூன் 4-ம் தேதி 9,304 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதேபோல், 8 மாதங்களுக்கு பிறகு 24 மணி நேரத்தில் 120-க்கும் குறைவான பலி எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 117 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நாட்டில் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1,77,266 ஆக குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15,901 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,03,45,985 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைவோர் விகிதம் 96.90 சதவிகிதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வேட்புமனு நிராகரிப்பு; வட்டாட்சியர் அலுவலகம் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்!

எடப்பாடி தவெக வேட்பாளரை காணவில்லை! வேட்புமனு நிராகரிப்பு!
செந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!

”என் வேட்புமனுவில் பிரச்னை இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள்!” ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை


