பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொருளாதாரத்தை மீட்டெடுக்க இதுவே வழி: மத்திய அரசுக்கு ப. சிதம்பரம் ஆலோசனை

மக்களிடம் பணம் புழங்கினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

News image
காங்கிரஸ் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம்
Updated On :28 ஜனவரி 2021, 10:37 am

DIN

மக்களிடம் பணம் புழங்கினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லும் என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற காணொலி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், துணைத் தலைவர் ஆனந்த் சர்மா, ப.சிதம்பரம், மணீஷ் திவாரி, மணிக்கம் தாகூர் மற்றும் கே.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இதன்பின்னர் ப. சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். 

இதில் ப. சிதம்பரம் பேசுகையில், பாஜக தலைமையிலான அரசு பிடிவாதமானது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகள் வழங்கும் நல்ல ஆலோசனைகளைக் கூட கேட்காது. பொருளாதாரக் கொள்கைகளின் பேரழிவு விளைவுகளைப் பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்பதை நாங்கள் அறிவோம். 

கரோனா பொதுமுடக்கம் இல்லாவிட்டாலும் நாட்டின் பொருளாதாரம் 2018-19 முதல் காலாண்டு முதல் அடுத்தடுத்த எட்டு காலாண்டுகளுக்குத் தொடர்ந்து சரிவையே சந்தித்திருக்கும். 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் -(மைனஸ்)23.9% மற்றும் இரண்டாம் காலாண்டில் -(மைனஸ்)7.5% ஆக வளர்ச்சி சரிந்துள்ளது. 

கடந்த நான்கு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்கும் பெருமை தற்போதைய நிதியமைச்சருக்கே உண்டு. 2020-21 நிதியாண்டின் இறுதிவரை எதிர்மறை வளர்ச்சியில்தான் பொருளாதாரம் இருக்கும். 

2020-21 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவர்ச்சிகரமான கதைகளை உருவாக்க முயற்சிப்பார். 2020-21 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகள் தவறான மதிப்பீடுகளாகவே இருக்கும்.

எனவே, பட்ஜெட்டுக்கு ஆலோசனையாக, பொருளாதாரத்தை சீர்படுத்த ஒரு பெரிய நிதித்தொகையை ஒதுக்க வேண்டும். மக்களிடம் பணம் புழங்கினால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்லும். 

இதற்காக, பொருளாதாரத்தில் பின்தங்கிய 20-30% குடும்பத்தினருக்கு ஆறு மாத காலத்திற்கு நேரடியாக நிதி வழங்க வேண்டும். ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விகிதங்களில் குறைப்பு, மூலதன செலவு அதிகரிப்பு, மூடப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களை மீட்டெடுத்தல் ஆகியவற்றின் மூலமாக பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.