கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

பிரிட்டன் விமானங்களுக்கான தடை பிப்.14 வரை நீட்டிப்பு

புதிய வகை கரோனா தொற்று பரவலின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கானத் தடை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

News image

பிரிட்டன் விமானங்களுக்கான தடை பிப்.14 வரை நீட்டிப்பு

Updated On :28 ஜனவரி 2021, 2:49 pm

புதிய வகை கரோனா தொற்று பரவலின் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கானத் தடை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

புதிய வகை கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படதைத் தொடர்ந்து பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு விமானங்கள் வருவதற்கும், இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு விமானங்களை இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 6ஆம் தேதி இரு நாடுகளுக்குமிடையே விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரிட்டனிலிருந்து வந்த பயணிக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதியானது. 

இதனால் பிரிட்டன் விமானங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்தது. இந்நிலையில் புதிய வகை கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை வியாழக்கிழமை அறிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.