சென்னை: குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வந்த கரோனா வார்டு மூடப்படுகிறது. இதையடுத்து, பிப்ரவரி 15 முதல் பொது வார்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது. இதையடுத்து, கரோனா வார்டு மூடப்பட்டு, தூய்மைப்படுத்தும் பணிகள் முடிந்து பொது வார்டு திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 1-ம் தேதி முதல் கரோனா வார்டு மூடப்படுகிறது. ஒட்டுமொத்த மருத்துவமனையும் தூய்மைப்படுத்தப்பட்டு, பிறகு பொது வார்டு திறக்கப்படும். இதற்கு ஒரு சில வாரங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு கரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தற்போது இந்த மருத்துவமனையில் ஒரேயொரு கரோனா நோயாளி மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, கரோனா வார்டை மூடிவிட்டு, பொது வார்டைத் திறக்குமாறு பொதுமக்கள் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பேரிடர் தொடங்குவதற்கு முன்பு, புறநகர் பகுதியான குரோம்பேட்டையில் அமைந்துள்ள இந்த அரசு பொது மருத்துவமனைக்கு நாள்தோறும் 1,500 புறநோயாளிகள் வந்து செல்வது வழக்கம், இங்கு 189 படுக்கை வசதிகளுடன் கூடிய பொது வார்டு செயல்பட்டு வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழில்துறை மின்னணு சாதனங்கள் உற்பத்தித் துறையில் களமிறங்கிய எல்&டி

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

ஈரோடு, கோபி வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு
இன்றைய ராசி பலன் (25.04.2026) -சிம்மம்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


