யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உ.பி. எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்

தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான திக்ரி பகுதியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

News image
உ.பி. எல்லையில் தொடரும் விவசாயிகள் போராட்டம்
Updated On :29 ஜனவரி 2021, 6:18 am

DIN

தில்லி - உத்தரப் பிரதேச எல்லையான திக்ரி பகுதியில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளனர்.

திக்ரி எல்லையிலிருந்து விவசாயிகள் வெளியேற வேண்டும் என உத்தரப்  பிரதேச அரசு வலியுறுத்திய நிலையில், விவசாயிகள் அப்பகுதியில் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

திக்ரி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வெளியேற வலியுறுத்தி அம்மாவட்ட அரசு உத்தரவு பிறப்பித்தது. 

அவர்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகளைத் துண்டித்தது.

எனினும் விவசாயிகள் திக்ரி எல்லையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குடியரசு நாளன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை காரணமாக விவசாய சங்கத் தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் வெளியேற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அப்பகுதியிலும் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.