தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே பலியான கேரள செவிலியர்

கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் 52 வயது செவிலியர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே மாரடைப்பால் மரணமடைந்தார்.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே பலியான கேரள செவிலியர்
தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே பலியான கேரள செவிலியர்
Updated on
1 min read


கொல்லம்: கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் 52 வயது செவிலியர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மறுநாளே மாரடைப்பால் மரணமடைந்தார்.

செவிலியர் சுஜாவுக்கு கடுமையான நீரிழிவு பிரச்னை இருந்ததாகவும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவர் உயிரிழக்கவில்லை என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை அவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அப்போது அங்கு சிறிது நேரம் அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டு, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது உடற்கூராய்வுக்குப் பிறகே, மாரடைப்பு ஏற்பட்டதற்கான காரணங்கள் தெரிய வரும். ஏற்கனவே தனியார் மருத்துவமனையில் அவரது இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு வெள்ளிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com