கோபி தொகுதியில் செங்கோட்டையனின் வேட்புமனு நிறுத்திவைப்பு!திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

நாட்டில் 1.7 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

இந்தியாவில் தற்போது கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.7 லட்சத்திற்கும் குறைவாக (1,69,824) பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.58 சதவீதம் மட்டுமே ஆகும்.

News image

நாட்டில் 1.7 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது கரோனா நோயாளிகள் எண்ணிக்கை

Updated On :30 ஜனவரி 2021, 12:39 pm

புது தில்லி: இந்தியாவில் தற்போது கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.7 லட்சத்திற்கும் குறைவாக (1,69,824) பதிவாகியுள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.58 சதவீதம் மட்டுமே ஆகும்.

ஒரு வாரத்தில் ஏற்படும் பாதிப்பு 9 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் தேசிய அளவை விட அதிகமாக உள்ளது. அதிகபட்சமாக கேரளத்தில் ஒரு வாரத்தின் பாதிப்பு 12.20 சதவீதமாகும், அதைத்தொடர்ந்து சத்தீஸ்கரில் 7.30 சதவீதமாகவும் உள்ளது. அதேவேளையில் 27 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் இந்த சதவீதம், தேசிய அளவைவிட குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97 சதவீதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது (96.98%). இது உலகளவில் அதிகமான சதவீதத்தில் ஒன்றாகும். நாட்டில் தற்போதுவரை 1.04 கோடிக்கும் அதிகமானோர் (1,04,09,160) குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 14,808 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களில் 5.7 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளனர்.

இன்று (ஜனவரி 30, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 97,126 பேர் உள்பட, நாடு முழுவதும் 35 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு (35,00,027) கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 10,809 முகாம்களில் 5,71,974 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 63,687 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 6,398 பேரும், மகாராஷ்டிராவில் 2,613 பேரும், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 607 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 13,083 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. நேற்று கேரளத்தில் 6,268 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,771 பேரும், தமிழகத்தில் 509 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 137 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.