எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பெரம்பூர் வேட்பாளர் பட்டியலில் 2 விஜய், 2 ஜோசப்! பழைய டெக்னிக் உதவுமா?

பெரம்பூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் 2 விஜய், 2 ஜோசஃப் உள்ளனர்.

News image

தவெக தலைவர் விஜய் - ANI

Updated On :7 ஏப்ரல் 2026, 3:12 pm IST

நடிகரும் தவெக தலைவருமான விஜய் போட்டியிடுவதால், சென்னை பெரம்பூர் தொகுதி அதிக கவனம் பெறும் தொகுதியாக மாறியிருக்கிறது. இந்த தொகுதியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

முன்பெல்லாம் பலருக்கும் எழுத்துக்கூட்டி மட்டுமே படிக்கத் தெரியும். இதனால் ஒரு வேட்பாளர் பெயரில், சில சுயேச்சைகளை எதிர்க்கட்சிகள் களமிறக்கி, உண்மையான கட்சி வேட்பாளருக்கு விழ வேண்டிய வாக்குகளை சுயேச்சைகளுக்குத் தெரியாமல் கிடைத்து, இதனால் வாக்குகள் பிரிக்கப்படும். இது மிக மிக பழைய டெக்னிக்.

ஆனால், இப்போது, பலரும் நன்கு படித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். குறிப்பாக தவெக தலைவர் விஜய்க்கு வாக்களிக்கக் கூடிய இளைஞர்கள் படித்திருப்பார்கள் என்பதாலும், முன்கூட்டியே வாக்குப்பெட்டியில் எங்கே பெயர் மற்றும் சின்னம் இடம்பெறும் என்பது மக்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்பதாலும், இந்த பெயர் குழப்பங்கள் எல்லாம் பெரிய அளவில் பலனளிக்காது என்றே தேர்தல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

இது மிக மிக பழைய டெக்னிக். இருந்தாலும் என்ன நட்டமாகிவிடப்போகிறது என்று முன்னணி கட்சிகளே இந்த உக்திகளை இன்னமும் கடைப்பிடித்து வருகிறார்கள், சில சுயேச்சைகள், தங்களது விளம்பரத்துக்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப். 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கின்றன.

பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. இதில் பெரும்பாலான முக்கிய வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், விஜய் என்ற பெயரில் தவெக தலைவர் தவிர்த்து இரண்டு பேரும், ஜோசப் என்ற பெயரில் விஜய் தவிர்த்து இரண்டு பேரும் வேட்பு மனு தாக்கல் செய்து களத்தில் உள்ளனர்.

பெரம்பூர் தொகுதியில் இரண்டு விஜய், 2 ஜோசப் என மொத்தம் 40 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் ஜி. விஜய், கே. விஜய், எஸ். ஜோசப், எம். ஜோசப் ஆகியோரும் அடங்குவர்.

தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கடந்த 30-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், மனுத் தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று (ஏப்.6) எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.