யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திரிபுராவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வார இறுதி ஊரடங்கு அமல்

திரிபுராவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :10 ஜூலை 2021, 12:08 pm

DIN

திரிபுராவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

திரிபுராவில் தற்போதைய நிலவரப்படி 4,175 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். அதேசமயம் கரோனாவிலிருந்து நேற்று மட்டும் 472 பேர் குணமடைந்தனர். இதனிடையே கேரளம், அருணாசல பிரதேசம், திரிபுரா, ஒடிஸா, சத்தீஸ்கா், மணிப்பூா் ஆகிய 6 மாநிலங்களில் கரோனா பரவல் அண்மையில் அதிகரித்தது. 

இதையடுத்து தொற்று பரவல் அதிகமுள்ள 6 மாநிலங்களுக்கும் கடந்த 2ஆம் தேதி மருத்துவ நிபுணா்கள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் கரோனா பரவல் காரணமாக திரிபுராவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய வார இறுதி ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்படி வார இறுதி ஊரடங்கு இன்று இரவு 12 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.