கேரளத்தில் கூடுதல் தளர்வுகள்: கடைகளுக்கான நேரம் நீட்டிப்பு

கேரளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 
கேரளத்தில் கூடுதல் தளர்வுகள்: கடைகளுக்கான நேரம் நீட்டிப்பு
Published on
Updated on
1 min read


கேரளத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

பொதுநிகழ்ச்சிகள் மற்றும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 8 மணி வரை நீட்டித்து, வங்கிகள் வாரத்தில் 5 நாள்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வார இறுதி நாள்கள் ஊரடங்கைத் தவிர்த்து மற்ற நாள்களில் அனைத்து வகையான கடைகள் மற்றும் தொழில்களும் கரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் வாரத்தின் அனைத்து நாள்களும் இரவு 8 மணி வரை இயங்கலாம். 

வார இறுதி நாள்களில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் படி பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்த நிலையில், மாநிலத்தில் கரோனா தொற்று 10 சதவிகிதத்திற்கு கீழ் குறையாதவரை முழு தளர்வுகள் வழங்கப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com