ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முன்னெப்போதும் இல்லாத வகையில் கரோனாவைக் கையாண்டுள்ள உ.பி. அரசு: பிரதமர் பாராட்டு

கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையை உத்தரப் பிரதேச அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

News image
Updated On :15 ஜூலை 2021, 11:22 am

DIN


கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலையை உத்தரப் பிரதேச அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாராணசிக்கு ஒருநாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வியாழக்கிழமை பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார். 

இதன்பிறகு அவர் பேசியது:

"கரோனா இரண்டாம் அலையையும், அதன் பரவலையும் உத்தரப் பிரதேச அரசு கட்டுப்படுத்தியவிதம் முன்னெப்போதும் இல்லாதது. கரோனாவை எதிர்கொள்ள உத்தரப் பிரதேசம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மெச்சத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் இன்று சட்ட விதிகள் இருக்கின்றன. மாஃபியாக்கள் ராஜ்ஜியமும், பயங்கரவாதமும் ஒரு காலத்தில் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தன. தற்போது அவை சட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.