பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் இன்று இரவு சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பில் கோவா வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வரும் நிலையில், கோவாவிலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுற்றுலா தளமான கோவாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்த முதல்வர் பிரமோந்த் சாவந்த் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்வர் பிரமோந்த் சாவந்த் தில்லி சென்றுள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடியையும், அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசவுள்ளார்.