தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

விநாயகர் கோயில் கட்டிய கிறிஸ்துவ தொழிலதிபர்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிறிஸ்துவ தொழிலதிபர் ஒருவர் விநாயகர் கோயில் கட்டியிருக்கும் சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image

சித்தி விநாயகர் கோயில்

Updated On :20 ஜூலை 2021, 11:53 am IST

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிறிஸ்துவ தொழிலதிபர் ஒருவர் விநாயகர் கோயில் கட்டியிருக்கும் சம்பவம் அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஷிர்வா என்ற நகரைச் சேர்ந்தவர் கேப்ரியல் நசரத்(77). தொழிலதிபரான இவர் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி, ரூ.2 கோடி செலவில் சித்தி விநாயகர் கோயிலைக் கட்டியுள்ளார். இந்தக் கோயிலை அவர் ரூ.2 கோடி செலவில், தனது பெற்றோர் ஃபேபியன் செபஸ்டியன் நசரத் மற்றும் சபீனா நசரத் ஆகியோரின் நினைவாக கட்டியுள்ளார்.

கோயில் கட்டியதன் காரணம் குறித்து கேப்ரியல் தெரிவித்ததாவது, ''நான் கடந்த 60 வருடங்களாக, கடவுள் சித்தி விநாயகரின் ஆசி பெற்றவனாக உணர்கிறேன். நான் கடந்த 1959 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு, வேலை தேடி மும்பை வந்தேன். அப்போது எனக்கு வயது 14 தான். மும்பையில் நான் பிரபாதேவி பகுதியில் தங்கியிருந்தேன். அதன் அருகே புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயில் உள்ளது. நான் அங்கே சென்று தினமும் கடவுளை தரிசிப்பேன்'' என்றார்.

சில வருடங்களுக்கு பிறகு கேப்ரியல், உலோக வண்ணம் பூசும் தொழிற்சாலை ஒன்றை துவங்கி வெற்றிகரமாக நடத்தினார். மேலும் 3 இடங்களில் தனது தொழிற்சாலையின் கிளையைத் துவங்கி தனது தொழிலை விரிவுபடுத்தினார். பின்னர் 12 வருடங்களுக்கு பிறகு தனது சொந்த ஊரான ஷிர்வா நகருக்கு திரும்பியுள்ளார். இதுவரை கல்யாணம் செய்துகொள்ளாத இவர், 60க்கும் மேற்பட்டோருக்கு கல்யாணத்துக்காக நிதியுதவி செய்துள்ளார். 

கேப்ரியல் கட்டிய விநாயகர் கோயில் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த கோயிலில் 36 அங்குலத்தில் அழகிய கருப்பு வண்ணத்திலான விநாயகர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கோயிலின் அருகே அர்ச்சகருக்கென தனியாக வீடு கட்டப்பட்டுள்ளது. கோயிலின் நிர்வாக உரிமை நாகேஷ் ஹெக்டே, மற்றும் கேப்ரியலின் நண்பர்களான சதீஷ் ஷெட்டி, ரத்னகர் குகியான் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.