ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மீராபாய் சானுவின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்: பிரதமர் மோடி பெருமிதம்

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானுவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

News image
பிரதமா் நரேந்திர மோடி
Updated On :24 ஜூலை 2021, 9:42 am

DIN

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்த மீராபாய் சானுவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இதை விட மகிழ்ச்சியான தொடக்கத்தை யாரும் கேட்டிருக்க முடியாது. சானுவின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியாவே மகிழ்ச்சியில் உள்ளது. பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற அவருக்கு வாழ்த்துகள். அவரின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டர் பக்கத்தில், "டோக்கியோ ஒலிம்பிக்ஸில் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளி பதக்கைத்தை வென்று பதக்க வேட்டையை தொடங்கியுள்ள மீராபாய்க்கு மனமார்ந்த வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.