ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

என்ன பேசுவார் பிரதமர் மோடி? 79-வது மனதின் குரலில் இன்று உரை

பிரதமர் நரேந்திர மோடி 79-வது மனதில் குரல் நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றுகிறார்.

News image
Updated On :25 ஜூலை 2021, 3:16 am

DIN


பிரதமர் நரேந்திர மோடி 79-வது மனதில் குரல் நிகழ்ச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உரையாற்றுகிறார்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு மனதில் குரல் உரையை நிகழ்த்தி வருகிறார் பிரதமர் மோடி. இதுவரை 78 மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியுள்ளார்.

79-வது மனதின் குரல் நிகழ்ச்சி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு மத்தியில் இன்று வருகிறது. எனவே, ஒலிம்பிக் போட்டிகள் குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் குறித்து பேசுவதற்கான வாய்ப்பும் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த நிகழ்ச்சியில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் இருக்கும் தயக்கம் குறித்து பேசிய அவர் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார் பிரதமர் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.