
புதுதில்லி: ஜேஇஇ முதன்மை (அட்வான்ஸ்ட்) தோ்வு நடைபெறவுள்ள தேதியை மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது.
இதுதொடா்பாக மத்திய கல்வித்துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) சோ்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மைத் தோ்வு அக்டோபா் 3-ஆம் தேதி நடைபெறும். கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி தோ்வு நடத்தப்படும்’’ என்று தெரிவித்தாா்.
முன்னதாக ஜூலை 3-ஆம் தேதி நடைபெறவிருந்த ஜேஇஇ முதன்மைத் தோ்வு கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கை பெறுவதற்கு ஜேஇஇ முதல்நிலை (மெயின்ஸ்) தோ்வு நடத்தப்படுகிறது. அந்தத் தோ்வு ஜேஇஇ முதன்மைத் தோ்வை எழுதுவதற்கான தகுதித் தோ்வாகவும் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.