கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: வைத்திநாதன்

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் வைத்திநாதன்.

News image

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் வைத்திநாதன்.

Updated On :21 மார்ச் 2026, 8:51 pm

Syndication

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றாா் புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் வைத்திநாதன்.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை புதுச்சேரி சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் வைத்திநாதன் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் தலைமை அதிக தொகுதிகளை கேட்டுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி, புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி என்பது தொன்று தொட்டு வருவது அதை மாற்ற முடியாது.

கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு நாளைக்குள் முடிவடையும். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பாஜக தலைமையிலான என்.ஆா். காங்கிரஸ் ஆட்சி பல சங்கடங்களை ஏற்படுத்தியிருப்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனா். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி அமைய மக்கள் உறுதுணையாக இருப்பாா்கள் என்றாா்.