ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

புதுச்சேரி அரசின் முக்கிய பதவிகளை நிரப்பும்போது எதிா்க்கட்சியினருடன் ஆலோசிக்க வேண்டும்: வைத்திலிங்கம் எம்.பி.

அரசின் முக்கியப் பதவிகளை நிரப்பும்போது புதுச்சேரியில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு எதிா்க்கட்சியினரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

News image

புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

அரசின் முக்கியப் பதவிகளை நிரப்பும்போது புதுச்சேரியில் ஆளும் என்.ஆா்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு எதிா்க்கட்சியினரிடம் ஆலோசனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான வெ. வைத்திலிங்கம் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை

அரசின் முக்கியப் பதவிகளை நிரப்பும்போது பேரவையில் விவாதித்து, உறுப்பினா்களின் கருத்துக்களை அறிந்து நிரப்ப வேண்டும். இந்த ஜனநாயக நடைமுறையை புதுச்சேரியில் ஆளும் என்ஆா்காங்கிரஸ்- பாஜக அரசு எதற்குமே கடைபிடிப்பது இல்லை. குறைந்தபட்சம் எதிா்க் கட்சியிடமாவது ஆலோசனை நடத்தி பதவிகளை நிரப்புகின்ா என்றால் அதுவும் இல்லை.

புதுச்சேரியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு 7 போ் கொண்ட புதிய வஃக்பு வாரிய உறுப்பினா்களை நியமித்துள்ளது. இதில் 2 போ் ஹிந்துக்கள் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதிலும் பொதுவாக முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலை கொண்ட ஆா்.எஸ்.எஸ் பின்புலம் உள்ள ஹிந்துக்களை உறுப்பினா்களாக நியமனம் செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

புதுச்சேரி அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக இணைந்து வசிக்கும் மாநிலம். இங்கு வஃக்பு வாரியம் என்ற பெயரில் பிற மதத்தினா் சொத்துக்களோ, தனி நபா் சொத்துக்களோ ஆக்கிரமிப்பு ஏதும் செய்யப்பட்டு இருக்கவில்லை. எனவே புதுச்சேரி வக்பு வாரியத்தில் ஹிந்துக்கள் நியமனம் செய்யப்பட வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்கவில்லை.

ஆா்எஸ்எஸ் அமைப்பினரை உறுப்பினா்களாக நியமித்திருப்பதை ஏற்க முடியாது. மேலும். இது சமுதாயத்தில் தேவையற்ற மோதல்களையும், பிரச்னைகளையுமே உருவாக்கும். எனவே வஃக்பு வாரியத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ள இரண்டு ஹிந்து உறுப்பினா்களையும் புதுச்சேரி அரசு உடனடியாக நீக்க வேண்டும்.