

கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,129 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புதிதாக 22,129 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றிலிருந்து 13,415 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்றைய நிலவரப்படி 159 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,326-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 13,415 பேர் குணமடைந்தனர். இதனால் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 31,43,043-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.