காவலர் மீது துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதி சுற்றிவளைத்து சுட்டுக் கொலை

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், காவல்நிலைய முகாமுக்குள் நுழைந்து தலைமைக் காவலரை சுட்டுவிட்டுத் தப்ப முயன்ற பயங்கரவாதி சுற்றி வளைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
காவலர் மீது துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதி சுற்றிவளைத்து சுட்டுக் கொலை
காவலர் மீது துப்பாக்கிச் சூடு: பயங்கரவாதி சுற்றிவளைத்து சுட்டுக் கொலை


ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், காவல்நிலைய முகாமுக்குள் நுழைந்து தலைமைக் காவலரை சுட்டுவிட்டுத் தப்ப முயன்ற பயங்கரவாதி சுற்றி வளைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜம்மு -காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால் பகுதியில், நள்ளிரவு வரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் மொஹம்மது அமின் மாலிக் என்ற பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் சிறப்புப் அதிரடிக் குழுவின் முகாமில் புதன்கிழமை மாலை தொடங்கிய துப்பாக்கிச் சண்டையில், வியாழக்கிழமை அதிகாலையில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த தலைமைக் காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com