கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெருந்தொற்றுக் காலம்: தனது ரூ.15 கோடி ஊதியத்தை விட்டுக் கொடுத்த முகேஷ் அம்பானி

கரோனா பெருந்தொற்றால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனது ஓராண்டு ஊதியமான ரூ.15 கோடியை விட்டுக் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.

News image

பொதுமுடக்க எதிரொலி: தனது ரூ.15 கோடி ஊதியத்தை விட்டுக் கொடுத்த முகேஷ் அம்பானி

Updated On :3 ஜூன் 2021, 10:01 am


புது தில்லி: கரோனா பெருந்தொற்றால், ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனது ஓராண்டு ஊதியமான ரூ.15 கோடியை விட்டுக் கொடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.

கடந்த மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவு பெற்ற நிதியாண்டில், கரோனா பெருந்தொற்றால் தனது நிறுவனத்தின் வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தாமாக முன் வந்து தனது வருவாயை விட்டுக் கொடுத்திருக்கிறார் முகேஷ் அம்பானி.

இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2020- 21-ஆம் ஆண்டு நிதியறிக்கையில், அம்பானியின் ஊதியம் - எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், கடந்த நிதியாண்டில் அவருக்கு ஊதியம் என்று ரூ.15 கோடி கணக்குக் காட்டப்பட்டுள்ளது. இதையே அவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பெற்று வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.