பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

பிகாரில் ஜூன் 14 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள்

பிகாரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கத்தில் வரும் 14-ஆம் தேதி முதல் தளர்வுகள் நடைமுறைக்கு வருகிறது.

News image

பிகாரில் ஜூன் 14 முதல் அமலுக்கு வரும் தளர்வுகள்

Updated On :8 ஜூன் 2021, 10:41 am


பாட்னா: பிகாரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமுறையில் இருக்கும் பொதுமுடக்கத்தில் வரும் 14-ஆம் தேதி முதல் தளர்வுகள் நடைமுறைக்கு வருகிறது.

அந்த வகையில் ஜூன் 14 முதல், பிகாரில் உள்ள சந்தைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தைகள் மாலை 5 மணி வரை செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சில்லறை, தனியார் மற்றும் அரசுத் துறைகளுக்கும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் இரவு நேர பொதுமுடக்கம் இரவு 7 முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் பள்ளிகள் மற்றும் கல்லூரி உள்பட அனைத்து கல்வி நிலையங்களும் அடுத்த உத்தரவு வரும் வரை மூடியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.