விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ம.பி.யில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு காவலர்கள் மரியாதை

மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சட்டையில் பதக்கம் வழங்கி காவல் துறை மரியாதை செலுத்தி வழங்கி வருகிறது.

News image
ம.பி.யில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு காவலர்கள் மரியாதை
Updated On :9 ஜூன் 2021, 7:31 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சட்டையில் பதக்கம் வழங்கி காவல் துறை மரியாதை செலுத்தி வழங்கி வருகிறது.

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களை அங்கீகரிக்கும் வகையிலும், தடுப்பூசி போடாதவர்களிடம் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் காவல் துறை இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருவதால், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

அந்தவகையில் தடுப்பூசி போட்டுக்கொண்டு கரோனாவுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவிய மக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காவல்துறையினர் பதக்கங்களை வழங்கி பாராட்டி வருகின்றனர். 

இது குறித்து பேசிய காவல் துறை அதிகாரி, இந்த செயல் தடுப்பூசியின் மீதான அச்சத்தை மக்களிடமிருந்து போக்குவதற்கு உதவும். தடுப்பூசி போடாதவர்களும் விரைவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதை இதன் மூலம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.