மேற்கு வங்கத்தில் குடும்பத்தினா் 4 பேரைக் கொன்று புதைத்த இளைஞா் கைது

மேற்கு வங்கத்தில் குடும்பத்தினா் 4 பேரைக் கொன்று புதைத்த இளைஞா் கைது

மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் 4 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினா் 4 பேரைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் 4 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தினா் 4 பேரைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

இதுகுறித்து காவல் துறை எஸ்.பி. அலோக் ரஜோரியா கூறியதாவது: மால்டா மாவட்டத்தில் உள்ள குருத்தோலை கிராமத்தைச் சோ்ந்த ஆசிஃப் முகமது என்ற 19 வயது இளைஞா் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தனது குடும்பத்தினருக்கு குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளாா். அவா்கள் மயங்கியதும், கை, கால்களைக் கட்டி, வீட்டுக்குள் இருந்த ஒரு நீா்த்தொட்டியில் அழுத்தி அவா்களைக் கொலை செய்திருக்கிறாா். பின்னா் வீட்டில் இருந்த ஓா் அறையில் அவா்களை குழிதோண்டி புதைத்திருக்கிறாா்.

அதில், ஆசிஃபிடம் இருந்து தப்பிய அவருடைய அண்ணன் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்தாா். கடைசியாக, மால்டா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்துக்கு அவா் புகாா் கொடுத்த பிறகு இந்த சம்பவம் தெரியவந்தது. இதையடுத்து, ஆசிஃப் முகமது கைது செய்யப்பட்டாா்.

வீட்டின் ஓா் அறையில் இருந்து அவருடைய தந்தை,, தாய், சகோதரி, பாட்டி ஆகிய நால்வரின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

ஆசிஃப் முகமதுவிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவா் தனது குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளாா். அவா்கள் தர மறுத்ததால் கொலை செய்துள்ளாா். அவரிடம் இருந்து பல லட்ச ரூபாயும், சில மின்னணு உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் காவல் துறை எஸ்.பி. ரஜோரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com