ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரோனா மரணங்களை மறைக்கிறது உ.பி. அரசு: அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேசத்தில் கரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
அகிலேஷ் யாதவ் (கோப்புப்படம்)
Updated On :22 ஜூன் 2021, 9:08 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் கரோனா மரணங்கள் மறைக்கப்படுவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உத்தரப் பிரதேசத்தில் கரோனாவால் ஏற்பட்ட மரணங்களுக்கும், அரசு பதிவு செய்துள்ள மரணங்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளின் அடிப்படையில் அகிலேஷ் யாதவ் இந்தக் கேள்வியை எழுப்புயுள்ளார்.

YouTube video thumbnail

இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உத்தரப் பிரதேசத்தின் கரோனா மரணங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. 

உத்தரப் பிரதேசத்தின் 24 மாவட்டங்களிலும் கடந்த ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் நடப்பாண்டு மார்ச் 31 வரை கரோனாவால் ஏற்பட்ட மரணங்கள் அரசு பதிவில் உள்ளதை விட 43 மடங்கு அதிகம் என்று தெரியவந்துள்ளது.

கரோனா மரணங்களை மறைப்பதன் மூலம் பாஜக தமது உண்மையான முகத்தை மறைத்துக்கொள்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.