தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேற்கு வங்கம்: கரோனா 3-வது அலையை கண்காணிக்கக் குழு அமைப்பு

மேற்கு வங்கத்தில் கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க 10 பேர் அடங்கிய குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2021, 10:21 am

DIN

மேற்கு வங்கத்தில் கரோனா மூன்றாவது அலையை சமாளிக்க 10 பேர் அடங்கிய குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது.

நாட்டில் கரோனா 3-வது அலைக்கு வாய்ப்புள்ளதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கு வங்க அரசு எடுத்துள்ளது.

கரோனா மூன்றாவது அலை கண்டறியப்பட்டால், அவற்றை ஆரம்பம் முதலே கண்காணித்து மேலாண்மை செய்யும் பணியை இந்தக் குழு மேற்கொள்ளவுள்ளது.

மேற்கு வங்கத்தில் 22,508 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.