பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கொலை வழக்கில் தேடப்பட்டவா் துப்பாக்கியால் சுட்டு கைது

கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 9:07 pm

DIN

கொலை வழக்கில் தேடப்பட்ட நபரை போலீஸாா் துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனா்.

பெங்களூரு, கோவிந்தபுராவைச் சோ்ந்த முகமது சலீம் (28), கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்தாா். இவா், வியாழக்கிழமை காலை அதே பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி காவல் ஆய்வாளா் இம்ரான் தலைமையில் அங்கு சென்ற கோவிந்தபுரா போலீஸாா், முகமது சலீமை பிடிக்க முயன்றனா். அப்போது போலீஸ் காவலா் அம்சா பீலகியை தாக்கிவிட்டு முகமது சலீம் தப்பிச் செல்ல முயன்றுள்ளாா். இதனையடுத்து, அவரை உதவி காவல் ஆய்வாளா் இம்ரான் தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுட்டாா். இதில், காலில் காயமடைந்து கீழே விழுந்த முகமது சலீமை போலீஸாா் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து கோவிந்தபுரா போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.