ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஆம் ஆத்மி நாடகமாடுகிறது: பஞ்சாப் முதல்வர் குற்றச்சாட்டு

பஞ்சாபில் செய்தியாளர்களர் சந்திப்பை நடத்துவதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுமதி மறுத்ததாக வெளியான செய்தி உண்மையல்ல என்று முதல்வர் அமரீந்தர் சிங் விளக்கமளித்துள்ளார். 

News image
அமரீந்தர் சிங் (கோப்புப் படம்)
Updated On :28 ஜூன் 2021, 11:25 am

DIN

பஞ்சாபில் செய்தியாளர்களர் சந்திப்பை நடத்துவதற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அனுமதி மறுத்ததாக வெளியான செய்தி உண்மையல்ல என்று முதல்வர் அமரீந்தர் சிங் விளக்கமளித்துள்ளார். 

பஞ்சாபில் நாளை (ஜூன் 29) செய்தியாளர் சந்திப்பை நடத்த முதல்வர் அரவிந்த் கேஜரிவால் திட்டமிட்டுருந்த நிலையில், அதற்கு பஞ்சாப் முதல்வர் அலுவலகம் அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியிருந்தது.

இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கேஜரிவாலுக்கு செய்தியாளர்களைச் சந்திக்க அனுமதி வழங்கவில்லை என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அரவிந்த் கேஜரிவால் கடந்த சில நாள்களுக்கு முன்பு பஞ்சாபில் பேரணி நடத்துவதற்கும் அனுமதி வழங்கினோம்.

அப்படி இருக்கையில், செய்தியாளர் சந்திப்பை நடத்துவதற்கு ஏன் அனுமதி மறுக்கப்போகிறோம். அவர் விரும்பினால், அவருக்கு மதிய உணவை ஏற்பாடு செய்வதிமும் எனக்கு மகிழ்ச்சி. ஆம் ஆத்மி கட்சி நாடகமாடுகிறது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.