மகாராஷ்டிரத்தில் 4,086 பேர் கருப்புப் பூஞ்சைக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டு 828 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா இரண்டாவது அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மகாராஷ்டிரத்தில் தற்போது வரை கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டு 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக நாக்பூரில் 1395 பேரும், புனேவில் 1,269 பேரும், அவுரங்காபாத்தில் 951 பேரும், மும்பையில் 571 பேரும், நாசிக்கில் 568 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.