ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குல்கம் மாவட்டத்தில் உள்ள சிம்மர் பகுதிகளில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து தேடுதல் வேட்டையில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
இந்நிலையில், அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.