47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தில்லி போராட்டத்தின் 100-வது நாள்: ஹரியாணாவில் திரண்ட விவசாயிகள்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா தேசிய நெடுஞ்சாலைகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

News image
ஹரியாணா தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்ட விவசாயிகள்
Updated On :6 மார்ச் 2021, 12:01 pm

DIN

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹரியாணா தேசிய நெடுஞ்சாலைகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளான இன்று (மார்ச் 6) மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  ஹரியாணா தேசிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் குவிந்தனர்.

Story image

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 100 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே ஹரியாணாவிலுள்ள விவசாயிகள் விவசாய போராட்டத்தில் 100-வது நாளை கருப்பு நாளாக அறிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

ஏராளமான விவசாயிகள் குண்டிலி, சோனிப்பட் சாலைகளில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பலர் டிராக்டர்கள் மூலம் நெடுஞ்சாலைகளில் பேரணி மேற்கொண்டனர்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு செவிசாய்க்காத நிலையில், எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை ஓயமாட்டோம் என்று பாரதிய கிசான் அமைப்பைச் சேர்ந்த ராகேஷ் திகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.