இந்தியா
அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: ஜலந்தரில் மீண்டும் இரவு நேர பொதுமுடக்கம் அமல்
கரோனா தொற்று பரவலின் அதிகரிப்பால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மீண்டும் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவலின் அதிகரிப்பால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் மீண்டும் இரவு நேர பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமுடக்கம் அறிவித்து ஜலந்தர் துணை ஆணையர் சனிக்கிழமை அறிவித்தார். இன்று முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் ஜலந்தரில் புதிதாக 134 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.