பஞ்சாப்: பாட்டியாலாவில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு

கரோனா பரவல் அதிகரிப்பால், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் மார்ச் 12 முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
பஞ்சாப்: பாட்டியாலாவில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு
பஞ்சாப்: பாட்டியாலாவில் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

கரோனா பரவல் அதிகரிப்பால், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் மார்ச் 12 முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு வியாழக்கிழமை அறிவித்தது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டு வந்த பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இதையடுத்து, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் மார்ச் 12 முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com