எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மும்பையில் புதிய கரோனா நோயாளிகளில் 90% பேர் பணக்காரர்களாம்! அதிர்ச்சித் தகவல்

மும்பையில் 2021-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 90% பேர் பணக்காரர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

News image
மும்பையில் புதிய கரோனா நோயாளிகளில் 90% பேர் பணக்காரர்களாம்! அதிர்ச்சித் தகவல்
Updated On :13 மார்ச் 2021, 10:34 am

DIN


மும்பை: மும்பையில் 2021-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 90% பேர் பணக்காரர்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எதன் அடிப்படையில் இவ்வாறு சொல்லப்படுகிறது என்ற சந்தேகம் எழலாம். விளக்கம் இருக்கிறது. அதாவது, மும்பையில் ஓங்கி உயர்ந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமானோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதுதான் அவ்வாறு கூறக் காரணம்.

மும்பை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் கரோனா புள்ளி விவரத்தின் அடிப்படையில், தெற்கு மும்பையின் அந்தேரி கிழக்கு மற்றும் மேற்கு, முலுந்த் மற்றும் பெட்டர் சாலை மற்றும் மலபார் ஹில் பகுதியில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளைச் சேர்ந்த ஏராளமானோருக்கு கரோனா பாதித்துள்ளது.

அதாவது, கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மட்டும் கரோனா உறுதி செய்யப்பட்ட 23,002 பேரில் வெறும் 10 சதவீதம் பேர்தான் குடிசை மற்றும் நடுத்தர, ஏழை மக்கள். ஆனால் மார்ச் மாதத்தில் குடிசைப் பகுதிகளிலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

மும்பையில் மார்ச் 1ம் தேதி நிலவரப்படி 10 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. 137 கட்டடங்கள் கரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டதால் சீல் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவே மார்ச் 10-ம் தேதி 27 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும், 228 கட்டடங்களாகவும் உயர்ந்துள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் குறித்த அலட்சியப் போக்கு அதிகரித்திருப்பதே இதற்குக் காரணம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.