எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாயாவதி

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

News image

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மாயாவதி

Updated On :13 மார்ச் 2021, 1:10 pm

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி சனிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது..

நாடு முழுவதும் பல்வேறு தலைவர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் நிலையில், சனிக்கிழமை பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

மத்திய, மாநில அரசுகள் ஏழை மக்களுக்கு கரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த மாயாவதி பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.